என்னுள்ளே என்னை புதைத்து
அதன் மீது ஏறி அமர்ந்து
நான் என்ற அகந்தை அழித்து
என் என்ற பதத்தை கிழித்து
திக்கெல்லாம் பறக்கவிட்டு
மனமென்னும் மாய வெளியில்
எழுந்திடும் எண்ணம் கொன்று
அகண்டதாம் ஆசையாழி
கடந்திடும் சூட்சமம் கண்டு
பரந்திருந்திருந்த இருவெளியதனில்
ஒளியாய் பரமனை கண்டேன்,
கிடைத்ததோர் கிடைப்பற்க்கரிய
பேரின்பம் பெற்றேனறிவாய்.
உலகினில் கிட்டுவதில்லை
சூன்யத்தில் நின்றான் அவனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக