ஞாயிறு, 30 நவம்பர், 2014

இறைமை




என்னுள்ளே என்னை புதைத்து
அதன் மீது ஏறி அமர்ந்து
நான் என்ற அகந்தை அழித்து
என் என்ற பதத்தை கிழித்து
திக்கெல்லாம் பறக்கவிட்டு
மனமென்னும் மாய வெளியில்
எழுந்திடும் எண்ணம் கொன்று
அகண்டதாம் ஆசையாழி
கடந்திடும் சூட்சமம் கண்டு
பரந்திருந்திருந்த இருவெளியதனில்
ஒளியாய் பரமனை கண்டேன்,
கிடைத்ததோர் கிடைப்பற்க்கரிய
பேரின்பம் பெற்றேனறிவாய்.
உலகினில் கிட்டுவதில்லை
சூன்யத்தில் நின்றான் அவனே.

கருத்துகள் இல்லை: