ஞாயிறு, 30 நவம்பர், 2014

தேடல் தொடங்கட்டும்!!

தேவா அண்ணாவின் தேடல் என்ற பதிவுக்கு பின்னூட்டமாக இடப்பட்டதை இங்கு பதிவாய் பதிகிறேன். காரணம் அந்த பதிவின் தாக்கத்தில் நீங்களும் அவரின் பதிவை வாசிக்க நேர்ந்தால் ஒரு நல்ல பதிவை உங்களிடம் சேர்த்ததற்காய் மகிழ்ச்சி கொள்வேன்.

தேவா அண்ணாவின் பதிவு : தேடல்   இங்கு க்ளிக்குங்கள்..

எல்லாம் கடந்து உள்ளிருப்பவன் கடவுள்.
எதற்குள் இருக்கிறான் என்ற ஆராய்ச்சி தொடங்கும்போது,
உன்னுள்ளிருந்து தொடங்கு.
இறைவன் விஸ்வரூபமானவன். ஆம் அவனை அளவிட முடியாது.
அவனால் படைக்கப்பட்ட ஓரோர் அணுவும் அவனால் இயங்குகிறது.
"அவனின்றி ஓரணுவும் அசையாது"

 
ஒரோரணுவும் ஒரு சிறு பிரபஞ்சம்.
அணுவின் அணுவாய் அதை இயக்குபவன் இறைவன்.


"சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே"

 
-ஆசான் திருமூலர்-


"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே"

 
-ஆசான் திருமூலர்-



 
இதை உணர தொடங்கும் நேரம் ஒவ்வொரு மனிதனும்
தன்னுள் கடந்து கட- வுள் உணர தொடங்கும் நேரம்
நீங்கள் தேடும் மனிதர்களையும் காண நேரிடலாம்.
மனித நேயம் மட்டுமல்ல, உயிர் நேயம் வேண்டும் இங்கு.
உடல்களின் எடையும் உருவ அமைப்பும் மாறலாம்,
உயிரின் எடை ஒன்றேன்றறிக.. பகவத் கீதை.
சமயம், புராணம், சம்பரதாயம், இன்னும் பிற வழிகள் அமைத்ததெல்லாம்
இவைகளை உணர்த்துவதர்க்கே, ஆனால் இங்கு நடப்பது வேறு.
புரிதலின் வேறுபாடு. உன்னை அறிந்துகொள், உண்மை புரிந்துகொள்.
கடவுளின் அடுத்து நிற்கும் உணர்வை பெறுவாய்.


கருத்துகள் இல்லை: