ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

நிஜம்.




ஒவ்வொரு நாளும்
காலை எழுந்ததும் நீ அறியாமல்
உன் கரங்களை  என் மீதிருந்து நகர்த்தி
அவசர அவசரமாக அந்த நாளுக்காய்
என்னை தயார் செய்துகொண்டு
அலுவலகம் அடைந்து
கணினியின் திரையிலும்
கோப்புகளின் பக்கங்களிலும் புதைந்து
அடுத்திருப்பவருக்கு ஒரு
புன்னைகையை கூட பகிர நேரமில்லாமல்
வேலையில் புதையும் வேளையிலும்
ஏதோவது ஒரு நொடியில்
ஏதோ ஒரு மூலையில்
உன் நினைவுகள் தீண்டாமல் இருந்ததில்லை.
நாளின் ஓட்டம் முடிந்து ஓய்ந்துபோய் வீடு வந்து
உள் நுழைந்து அமரும் வேளையில்
திறந்த உடன் ஓடி வந்து உடல் புகுந்து சில்லிடும்
மழைகால மாலையின் சன்னல் காற்றாய்
நொடிகூட தாமதிக்காமல்
சட்டென என் மீது படர்ந்து கொள்கிறாய்.
இப்படி இருக்க எப்படி நம்புவேன் நான்
நீ என் வாழ்வில் இல்லை என்று.





கருத்துகள் இல்லை: