புதன், 21 ஆகஸ்ட், 2013

நீயற்றும் உன்னுடன்




சிதிலமான என் வாழ்க்கையை
காதலெனும் பதத்தால் செப்பனிட்டாய்.
உன் உணர்வுகாளால்
என்னில் உயிர் நிறைத்தாய்.
வெறும் கனவு கூடாதென்று
கனவாய் இருந்த வாழ்வை
உயிர்ப்புடன் வாழவைத்தாய்.
என்னை சுற்றி இயங்கும் உலகின்
ஒவ்வொரு அசைவிலும் நீ நிறைந்தாய்.
எல்லாமுமாய் இருந்து
சட்டென ஒரு நாள் இல்லாமலும் போனாய்.
எங்கு ஏன் சென்றாய் என்ற
விடையறியாக் கேள்விகளுக்குள்
என்னை தள்ளிவிட்டு
காணாமல்தான் போயிருந்தாய் நீ.
இருப்பினும் உயிர்ப்புடன் வாழ்கிறேன் நான்.
நீ எனக்காக விட்டுச்சென்ற
உன் நினைவுகளே எங்கும் நிறைந்திருக்கும்
ஒரு நிசப்தமான உலகத்தில்.
உனக்கான என் காதலுக்கு
நீ வேறாய் நின் நினைவுகள் வேறாய்
பகுக்கத் தெரிந்ததில்லை
அன்றும் இன்றும் என்றும்.

1 கருத்து:

Yaathoramani.blogspot.com சொன்னது…

பிரிவின் துயர் சொல்லும் கவிதை
மிக மிக அற்புதம்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்