செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

காதலியல்




நீயில்லா நாள் ஒன்றில்
சாலையை கடக்க முயல்கையில்
தன்னிச்சையாய் என் கரம் நீண்டு
உன்னை தேடிய பொழுதில்தான் உணர்ந்தேன்
நீ புறத்தில் அல்ல என் அகத்தில் நிறைந்தவள் என்று.
ஒருவேளை அன்றுதான் உனக்கான
எனது காதலை நான் உணர்ந்திருப்பேனோ.

கருத்துகள் இல்லை: