செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

என்ன மாதிரியான உலகம் இது




என்ன மாதிரியான உலகம் இது,
என்னில் பொய்மை கலந்து
தன்னலம் மிகுந்து,
கர்வம் கலந்து,
சுற்றத்தை ஏளனமாய்
பார்த்த போதெல்லாம்
என்னை நம்பி போற்றிய இது,
நான் இவை எல்லாம் கடந்து
உண்மையாக மாறிய பொழுதில்
என்னை தூற்றி தூக்கி எறிகிறது.
இதை நான் மன்னிப்பதா
இல்லை மறப்பதா?
இந்த இரண்டை செய்யவும்
நான் யார் என்ற கேள்வியே பிரதானமாகிறது.
எனை எனக்குறைத்த மனமே
இதற்க்கும் விடை பகர்வாயா??

கருத்துகள் இல்லை: