வியாழன், 3 அக்டோபர், 2013

நினைவலைகள்!

எல்லாம் மறந்துவிட்டது என்று நம்பும் வேளையில்
ஏதோ ஒரு ரூபத்தில் வரும் பதின்மத்தின் நினைவுகள்
மெதுவாய் நம்மை பழமைகளுக்கும் அமிழ்த்த,
விரியும் காட்சிகளில் சில
ஆரிய வடுவில் மழு வைத்து இடற
உணரும் வேதனையில் மனசு கணக்கிறது.
கண்களின் ஈரத்தை இமைகள் துடைக்கிறது.
மனசின் ரணத்தை காலம் கரைக்கிறது.
எல்லாம் கடந்து மீண்டெழும் பொழுதுகளில்
அவை மற்றுமொரு வேளையில்
வேறேதேனும் ரூபத்தில்
நம்மை பழமைகளுக்குள் இழுக்கும்.

கருத்துகள் இல்லை: