புதன், 23 அக்டோபர், 2013

கவிஞனுக்கு சமர்ப்பணம்

இரவென்றும் பகலென்றும்
பாராமல் உனக்காக
நான் காத்திருந்த
பொழுதுகள் எல்லாம்
வீணாகப் போனதாய்

யாரேனும் கூறினால்
அவர்களுக்கு நான்
பதில் சொல்வதில்லை,
கவிதை புத்தகத்தையே
வாசிக்க தருகிறேன்.
வாசித்து முடிக்கையிலும்
நேசித்த இதயத்தை
சுவாசித்து முடிக்கையிலும்
காதல் காதல் காதல்...
காதல் மட்டுமே
எல்லாம் எல்லாம்
கடந்து நிற்கும்.
இப்போது கேட்கிறேன்
வீணாகப் போனதா
காத்திருந்த பொழுதுகள் ??.
இல்லை இல்லை
காணமல் போனது
எங்கள் இதழ்
உதிர்த்த வார்த்தைகள்.
ஓ காதலனே
காதலாகிப் போனோம்
உன் கவிதைகளால்.
அவளுக்கான காத்திருப்புகள்
அனைத்துமே உன்
கவிதைக்கான விதைதான்.

கருத்துகள் இல்லை: