புதன், 16 ஜனவரி, 2013

கனவல்ல !!!

என் கனா கானகங்களில்  நிறைந்து
கிடக்கும் அடர்ந்த மௌனத்தின்
அத்தனை துகல்களிலும்
உன் சப்தங்கள் மட்டுமே
நிசப்தமாய் ஒலித்து
என்னை தாளாட்டி கொண்டிருக்கிறது.
பூவின் இதழ் கருகாமல்
பனி திருடும் கிரணங்கள் போல
நான் அறியாமல்
என் மனம் திருடிய மயிலே,
என் உறக்கங்கள் உன் மடிமீது.
கனவல்ல இது காதல்.

கருத்துகள் இல்லை: