சனி, 9 ஜூலை, 2011

கனவொன்று கையில்..


ஏதேதோ மாற்றங்கள் என்னுள்,
உனக்காக காத்திருந்த நாட்களில்
கனவிலும் தோன்றாத சிந்தனைகள்.
காரணம் நீயா? இல்லை
எனக்காக நீ அள்ளித்தந்த காதலா?
எதோ ஒன்று... மீண்டும் நீ என்னருகே..
என் உணர்வுகள் நிஜம்...
உனக்கான என் நேசம் நிஜம்..
நட்பு எனக்களித்த பரிசு நீ..
காதல் எனக்கு நீ தந்த வரம்..
நட்பெனும்போது நீ என் தோழியானாய்.
காதலெனும்போது நீ என் தேவதையானாய்..
உணர்வோடு கலந்தவளே
என்றென்றும் நீ என் உயிரானாய்..

கருத்துகள் இல்லை: