புதன், 5 ஜூன், 2013

என் காதல்


 
இரு மலைத்தொடர்களின்
இடைப்பட்ட பள்ளத்தாக்குகள் நிரப்பி
சமவெளிகளில் நிறைந்து
கடல்களில் கலந்து
பெரும் பிரவாகமாக பரவிக்கிடக்கிறது
உனக்கான என் காதல்.
நீயோ மலை முகட்டில் நின்றுகொண்டு
சிதறிய சில துளிகளில் மட்டும் நனைந்து
என் காதலை கண்டுகொண்டேன் என்கிறாய்.
என் காதலை முழுவதுமாய் உணர
உனக்கு ஒரு ஜென்மம் போதாது அன்பே.
ஒவ்வொரு முறை நீ பிறந்து வரும்போதும்
பிரவாகம் கூடிய காதலுடன் உனக்காக காத்திருப்பேன்.

- கௌதமன் ராஜகோபால்

1 கருத்து:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக மிக அருமை
இதைவிட காதலின் ஆழத்தைச்
சொல்வது கடினமே
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்